இது வரை நடந்த பிரச்சனைகளுக்கு கலாநிதி மாறன் தான் காரணம் என்பதில் பிறந்த குழந்தைக்குக் கூட சந்தேகமிருக்காது.
ஒரு ஈகோ பிரச்சனை இத்தனைக்கும் காரணமாகின்றது., என்றாலும் தினகரன் ஆசிரியர் குழுக்களுக்கு புத்தி கிடையவே கிடையாதா?
இப்பத்தான் ஒரு கருத்துக்கணிப்பை விட்டு குடும்பத்தில் குழப்பமாக்கினாங்க, அடுத்து ஒன்றாக வேகமாக முடிவெடுப்பது யார் என்று.
சாமி தினகரன் ஆசிரியர் குழுக்களா உங்களுக்கும் கலாநிதி மாறன் கூட எதாவது மறைமுக பிரச்சனை (நம்ம தமிழ் படத்தில் வருவது போல கூட இருந்தே குழி பறிக்கிற...) இருக்கிறதா?
இல்ல ஜெ-வின் ஆட்கள் தான் தினகரன் ஆசிரியர் குழுக்களில் இடம் பெற்று வேலையைக் காண்பிக்கிறார்களா????
எதுவாய் இருந்தாலும் அப்பா கலாநிதி மாறா கொஞ்சம் அடக்கி வாசிப்பா...
பாவம் உங்கப்பா கலைஞருக்காய் உயிரையே கொடுத்தவர், இப்ப அதுக்கு பழி வாங்க கிளம்பிட்டீங்களா?
பணம் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்..ஆனால் பாசம்???
பாவம் ஒரு முதியவரைப் போட்டு இந்த அளவுக்கு நோகடிக்காதீங்க........!!!!!!!