Tuesday, July 7, 2009

கோவை-பொள்ளாச்சி (சாவுச்) சாலை





இந்தச் சாலையில் இரண்டு சக்கரங்களில் பயணம் செய்வோர் சந்திக்க நேரிடும் அபாயங்கள் கணக்கிலடங்காதவைகள்.


பொதுவாகவே தமிழ்நாடு அரசு(அது எவன் வந்தாலும்) தனியாரின் பணத்துக்கு டாஸ்மாக்காய் ஆடும்.




இந்தத் தடத்தில் தனியாரின் ஆக்கிரமிப்பும்,பணபலமும் ஏராளம்.
மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் இங்கு அரசுப் போக்குவரத்து பேருந்துக்கள் தேவலாம்.


தனியாருக்கும் இவர்களுக்கும் நடக்கும் போரில் இவர்களின் கை என்னமோ சற்றே தாழ்ந்திருந்தாலும், இரண்டு சக்கர வாகனங்களை சட்டை பண்ணாமல் இருவருமே யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது.


முதலாவது



இவனுக இப்படி ஓட்டுதற்க்கு காரணம் ஆகச் சொல்லப் படுவது டைமிங். 40 நிமிடத்தில் சேர வேண்டும்மாம்.
இது தனியார் ஓட்டுநர்கள் சொல்லுகின்ற காரணம்.



அரசுப் பேருந்துகளும் தான் அதே டைமிங்கில் ஓட்டி வருகின்றனர். அவர்களுக்கு அந்த பிரச்சனை இல்லையா?
என்றால் இருக்கிறது.
அதோடு குடும்பமும் இருக்கிறது.
அதனால் விரட்டி ஓட்டுவது கிடையாது.


தனியார் நாய்களுக்கும் குடும்பம் இல்லாமல் இல்லை,ஆனால் பணி நிரந்திரம் கிடையாது.
இன்னைக்கு இவனால் தான் கலெக்ஷன் கட்டு என்றால்,அன்றோடு டிரைவருக்கு வேட்டு.....

அவன் என்ன பண்ணுவான்???



இரண்டாவது


சாலை,அகலமில்லாதது.இதனைச் சீர் செய்ய இது வரை யாரும் குரல் கூட எழுப்பவில்லை.
ஏன் என்றும் புரியவில்லை.

இரண்டு வண்டிகள் போகலாம் என்றால் ரோட்டுக்கு 10 அடி தூரம் வரை ஈ காக்காய் கூட பறக்க முடியாது.இது தான் உண்மை, இதனை யாரும் இன்று வரை அகலப்படுத்த நினைக்கக் கூட இல்லை.



காரணம் இது அதிமுக தொகுதி- அது போதாதா திமுக-காரனுகளுக்கு?



அதிமுக- காரனுகளுக்கு?


அது தான் ஒரு எம் எல் ஏ, இருக்கிறாரு,புதுசா ஒரு எம்.பி வேறு வந்திருக்கிறாரு அவனுகளுக்கு என்ன வேலை? என்று மணப் பெண்ணை ஜோடித்து மணவறைக்குள் அனுப்புவது மாதிரி அனுப்பிட்டு உட்கார்ந்திருக்கானுக....(அங்க டைவுசரு கழன்டுறுக்கிறது யாருக்குத் தெரியும்?)


அவனவன் போட்ட காசை எடுக்கனும், மேலேயும் பங்கு கொடுக்கனும்,அடுத்த சீட்டுக்கு காசு தேத்தணும் உஸ் அப்பாடி இப்பவே கண்ணைக் கட்டுதுன்ணு உட்கார்ந்துட்டானுக....


ஒரு வேளை நாம் கேட்டால் ‘’இங்க பாருங்க நான் கடிதம் எழுதியிருக்கிறேன்’’ என்று காண்பித்தாலும் காண்பிப்பானுக...


தீர்வு தான் என்ன??


1.பயண நேரத்தை மாற்ற வேண்டும்.


2.சாலையை அகலப்படுத்த வேண்டும்.


3.கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்


4.ஒரு முறை விபத்து நடந்தால் ஓட்டுநரின் லைசென்ஸை ரத்தே செய்ய வேண்டும்.


5.இரண்டாவது முறை விபத்து நடத்தும் பேருந்தின் லைசென்ஸை நிறுத்த வேண்டும்


இவைகளை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை.


கலைஞருக்குத் தான் கடிதம் எழுத முடியுமா??