Monday, May 28, 2007

அழகிரியின் கலவரம் நன்மையில் முடியுமா?

திமுக தலைமையில் மாற்றம் வரும்.
ஸ்டாலின்

ஸ்டாலினுடைய தலைமையை அன்பழகன் ஏற்க மறுத்து வருகிறார். அதனால் தான் இன்னும் தலைமைக்கு ஸ்டாலினுடைய பெயரை அறிவிக்க தாமதமாகிறது.

முதலாவதாக ஸ்டாலினுக்கு ஆளுமைத் திறமை கிடையாது என்பது கடந்த காலங்களில் நிரூபணமான ஒன்று. அவருடனிருக்கும் கூட்டம் அவரைத் தாண்டியத அறிவு படைத்த கூட்டம். இன்று கலைஞருக்காய் மவுனமாய் ஸ்டாலினை ஆமோதிக்கின்றனர்.

கடந்த ஜெ-சட்ட மன்ற காலங்களில் ஸ்டாலின் நன்றாக செய்திருக்கலாம். ஆனால் அவரால் அது முடியவே இல்லை.

கலைஞர் சட்ட சபை வரலாற்றில் ஒரு அகராதி. அது ஸ்டாலினுக்கு சுத்தமாய், சுட்டுப் போட்டாலும் வராது.

அழகிரி-

கட்சியை வழிநடத்தக் கூடிய திறமை இவருக்கு இருக்கிறது.அனைவரையும் அரவணைத்து, ஜெ,வைகோ-கலாநிதி குரூப்பை சமாளிக்ககூடிய ஆற்றல் இவருக்குத் தானிருக்கிறது.

கனிமொழி
கலைஞர் வாயாலேயே வாரிசு பட்டம் பெற்றவர். இவர் மிகத் தகுதி பெற்றவர். ஆனால் ஜெ- போன்று ஒரு துணிவு இவரிடமில்லாதது ஒரு குறை.


முடிவாக....

கலைஞரும், அன்பழகனும் அமைச்சகப்பணியைத் துறந்து விட்டு, கட்சிப்பணி ஆற்ற வரலாம்.

இப்போதிருந்தே ஸ்டாலினுடைய அரசு நிர்வாகம்- கூட்டணிக்கட்சிகளும் அமைச்சராகலாம்.

அழகிரி அன்பழகனுக்கு அடுத்த பதவியில் உட்கார வைக்கப் படலாம்....

இது திமுக-வின் எதிர்காலத்திற்கு நல்லது.

Sunday, May 27, 2007

குலத்தொழிலை எதிர்த்த பெரியார் இன்று இருந்தால்

கனிமொழியின் அரசியல் பிரவேசத்திற்கு என்ன கூறியிருப்பார்....????

அண்ணா இன்று இருந்தால் திருக்குவளை மு.கருணாநிதி-யை உச்சிமோர்ந்திருப்பாரா????

ஆனால் கனிமொழியைப் பொருத்த வரையில் ஒரு எதிர்பார்ப்பை நாம் வளர்க்கலாம்.சிலர் கூறுவதைப்போல திமுக-வில் அனுபவஸ்தர்கள் யாருமில்லையா என்று கேட்கின்றனர்..

எதில் அனுபவம் வேண்டும்??? திமுக-வில் உள்ள திருடன்களில் நம்பிக்கையானவர்கள் யார் இருக்கிறார்கள்??

எல்லாரையும் மீறி சரத்குமாருக்கு கொடுத்தனர், என்ன ஆச்சு? திமுக குளத்தாங்கரையிலுள்ள கூழாங்கல்லாய் போனது தான் மிச்சம்.

இன்றைக்கு எல்லாம் அரசியல் இப்படித்தானுங்க........

இதில் கனிமொழிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சும்மாவாங்க அண்ணாவோட இதயத்தை மட்டுமல்ல கட்சியையும் திட்டமிட்டே திருடினார். திமுக- என்ற பெயரே அவர் திட்டமிடலில் எவ்வளவு பலமானவர் என்பதை நிரூபிக்கும்.


அடுத்து மகாராஜாவின் பிறந்த நாள் அறிவிப்பாய் திமுக-வின் அரசியல் வாரிசு விரைவில்......

Wednesday, May 23, 2007

புதியதோர் டிவி படைப்போம்(மறு ஒலிபரப்பு)

இது 13 \5\7 ல் எழுதியது




ரத்தத்தின் ரத்தம்; அண்ணே பாத்திங்களா திமுக-காரனுகளுக்கு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி மாதிரி நம்ம டிவியையும், சன் டிவியையும் சமாளிக்கனும்...

வைகோ; இப்போ தெரியுதா டிவி இல்லாமல் கட்சி நடத்தும் கஷ்டம்..?

இதனை கேட்ட கலைஞர் ஆஹா கட்சிக்கு கோஷ்டி மாதிரி டிவியும் முக்கியம்- என நினைக்கையிலேயே ஒரு கோஷ்டி உள்ளே வருகிறது....

ராதிகா; அப்பா நான் அப்பவே சொன்னேனே.. கேட்டீங்களா?
இப்பவும் ஒண்ணும் கெடலை..கனியை கொள்கை பரப்பு செயலாளர் ச்சீ ச்சீ.. தகவல் துறை அமைச்சராக்குங்கள்.. ராடன் டிவிக்கு அனுமதி கொடுங்க....

24மணி நேரத்தில் வரும் அத்தனை மெகா சீரியல்களுக்கு இடையே உங்களின் பொன் மொழிகளை இரண்டு இரண்டு நிமிடமாய் காட்டிக் கொண்டிருப்பபோம்.

கூடவே தினகரன் மீட்பு இயக்கம்-ன்னு ஒன்னைப் போட்டு பச்சைத் தமிழன் சரத் தலைமையில் அமைப்போம்


இராமதாஸ்; நம்ம டிவிக்கு வந்திடுங்க...இந்த நாள் இனிய நாள்-ன்னு நீங்களும், வணக்கம் தமிழகத்துக்கு நானும், தொகுப்புக்கு தொல.திருமா-வையும்.,...போட்டுத் தாக்கலாம்.

வசந்த குமார்; ஐயா நம்மளை இது நாள வரை போட்டு அமுக்கி வச்சிருந்தாங்கே... இப்போ ஒளிமயமான டிவிக்கு வசந்த் அன் கோ மாதிரி... நீங்க தான் ஆதரவு அளிக்கனும்..

பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்க.. இல்ல இல்ல தமிழ் தலைவா அன்று 16 வயதினிலே-ஐ ப்போல புத்தம் புதிய தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்த ராமர் பாலத்துக்கு அணிலைப்போல உதவ ஓடோடி வந்தேன்....

பக்கத்திலிருக்கும் டி.ஆர்.பாலு தலைவா சந்தேகமே இல்லை (ராமர் பாலத்தை இழுத்தால்) இவன் அவன் தான்

பாரதி ராஜா; நான் அவன் இல்லை என்று கதற கதற அழகிரி ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறார்...

உஸ் அப்பா இப்பவே கண்ணைக கட்டுதே-- கலைஞர் கண்ணை சற்றே மூட..

ஏய் சன்னு
உன் வாயில மண்ணு.. என்றவாறே விஜய ராஜேந்தர் பிரவேசிக்க.....

அழகிரி குறுக்கிட்டு எந்த சன்? என்க...

நிமிடத்தில் அடுக்கு மொழி பறக்க...சாதா மொழியில்...

தலைவா அந்த எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்...இந்த சன்னை எதிர்க்க என்னை களமிறக்குங்கள்.. துண்டைக் காணோம் துணியக் காணோம்-ன்னு ஓட வைக்கிறேன்...

அழகிரி கோஷ்டி குசு குசுப்பாய் அழகிரியிடம் தலைவா இவன் தமிழகத்தையே அப்பிடி ஓட வச்சிருவான் அதனால... என்பதுக்கு முன்னமே அழகிரியின் கண்ணசைய....



அழகிரி;(ஸ்டாலினைப் பார்த்து)
இவனுகளை எல்லாம் வளர்த்து வுடுவதுக்கு பதில் நாமே ஒரு டிவியை ஆரம்பிப்போம். வழக்கம் போல வடக்கு உனக்கும் உன் பையனுக்கும், தெற்கு எனக்கும் என் பையனுக்கும்.


கலைஞர்; அருமை அருமை.. அனைத்து இலவச கலர் டிவிகளுக்கும் இலவச கேபிள் தம்பி விஜயகாந்த் கோரிக்கையை ஏற்று என்று அறிவிப்பை பத்திரிக்கைக்கு கொடுத்திடுங்க.

Monday, May 21, 2007

காவிரியும் 40 (எம்.பி) திருடர்களும்

இந்தியாவை தாயாகவே சித்தரித்து பழக்கப்பட்டவர்கள் நாமெல்லாரும். அதே மாதிரி தான் தமிழகத்தையும்.

இம்போது நம்மை உச்சந்தலையில் ஆந்திராவும், பொடனியிலே கர்நாடகமும்,பின்னாடி கேரளாவும் (இந்தப் பதிப்பை ஆபாசமாக எழுத வேண்டாம் என்று கட்டுப் பட்டு) காலடியிலே வுடுதலைப் புலிகளும்... குத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.....

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நமது ஆசானுக்குத் தெரியம், இது நாள் வரை பாசவலையில் வீழ்ந்த அவர் 83 வயசுலே தான் எழுந்திருக்கவே முடிந்திருக்கிறது.

இப்போ டி.வி இல்லைன்ன உடனே டி.வி ஆரம்பிக்க நினைத்த அவருக்கு, காவிரி இல்லைங்கிறதை யாராவது ஞாபகப்படுத்த வேண்டும்.

40 எம்.பிக்களை கை வச்சிருக்கும் நீங்க அடுத்த வருடம் எலெக்ஷனைப் பார்க்க வேண்டும். அடுத்த தடவை 40ம் கிடைக்கும் என்பது நிச்சயமா?

இது வரை பேரனுக்காக (குடும்பத்துக்காய்) பார்த்தீர்கள், இனியாவது மிரட்டல் அஸ்திரத்தை எடுங்கள்.

இராமதாஸ் கட்சி மாறுவதுக்கு இந்திய அளவில் நீங்க தான் முன்னுதாரணம்.

40 பேரையும் ராஜினாமா பண்ணச்சொல்லுங்கள். காவிரிக்காய்,இட ஒதுக்கீட்டுக்காய் அரசியல் செயதீங்கன்னுட்டு நாளை உங்க பேரும் வரலாற்றில் நிற்கட்டும். எல்லாப் பயலுகளும் சம்பாரிச்சுட்டானுக.... இனியாவது இதுக்கு ஒரு முடிவெடுப்பானுகளா?????????????

Saturday, May 19, 2007

இனியாவது வெங்கடேசப் பண்ணையார் விவகாரம் தீவிரமாகுமா?

திருமதி ராதிகா செல்வி மத்திய அமைச்சராகி விட்டார். ஆனால் எனக்கு இன்னும் ஒரு வருத்தம் அவர் மேலே உண்டு.

கணவரின் உயிரை இழந்து இப் (எம்.பி) பதவிக்கு வந்த போதும், பதவியிலிருந்த போதும் ஒரு தீவிரமான நடவடிக்கைக்கு குரல் கொடுக்கவில்லை என்பது எனது கருத்தாகும்.

எனது விருப்பம் இனியாவது அவர் இது குறித்து கலைஞருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

கலைஞரிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம்.

பொதுவாகவே அனுதாப ஓட்டுக்காய் நிறுத்துவது, ஜெயித்த பின்பு அவருக்கு என்ன வாக்குறுதி கொடுத்து நிறுத்தினோம் என்பதே மறந்து போய் விடும்.


ஆலடி அருணா விவகாரத்திலும், இதே மாதிரி தான்.

இதனாலதான் அழகிரியை எதிர்க்க எதிர் முகாமுக்கு ஒட வேண்டி வந்தது தா.கி ஆட்களுக்கு.

அங்கு போனவங்க ஊமையன் கனா கண்டதை சொன்ன மாதிரிதான்., எப்படிச் சொல்லுவேன் என புலம்பித் தவிக்கின்றனர்.


நாடாருக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்வி வேண்டுமானால் அடங்கலாம். ஆனால் அடுத்த கேள்வி இது தான்......

Friday, May 18, 2007

கட்சி ஒனர்ஸ் அசோசியேஷன்

சங்க கூட்டம் நாள் 18\5\07

கலந்து கொண்டவர்கள்

தலைவர்- மு.கருணாநிதி, புரோப்ரைட்டர்
தி.மு.க (பி) லிட்,

உப. தலைவர்- அம்மா ஜெயலலிதா,பார்ட்னர்,
அ.தி.மு.க (பி) லிட்,

இணை தலைவர்- விஜயகாந்து பார்ட்னர்,
தே.மு.தி.க (பி) லிட்,

பொருளாளர் - இராமதாஸ் புரோப்ரைட்டர்,
பா.ம.க (பி)லிட்
செயலாளர்- வைகோ புரோப்ரைட்டர்,
ம.தி.மு.க (பி) லிட்,

உறுப்பினர்கள்- இ.காங் (இ)லிட்,பா.ஜ.க (இ)லிட்,விடுதலைச் சிறுத்தைகள் லிட்,
கம்யூனிஸ்ட் (சைனா)லிட்,

சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்-

கட்சிக்குள் வெளியாட்கள் அனுமதி கிடையாது.

கட்சி உறுப்பினர்களுக்கு டி.வி.முக்கிய தகுதியாக கொள்ளப்படுகிறது.

Thursday, May 17, 2007

நிகழ்வுகள்-4

நிகழ்வு-1
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் வரலாறு தெரியாமல் அவரது கனவு திட்டத்தை எதிர்க்கின்றனர். (சேது சமுத்திர திட்டத்திற்கு)

விஜயகாந்து சொன்னது போல 'கட்சி ஆரம்பிச்சிருந்தால் கஷ்ட நஷ்டம், கொள்கை,வரலாறு தெரியும்.இவங்க குடி வந்தவங்களுக்கு என்ன தெரியும்?
( ஆஹா.. நம்ம விஜயகாந்து உண்மையிலேயே அதிமுக-விற்குத் தான் இதனைச் சொல்லி இருக்க வேண்டும், என்ன மப்பிலயோ அன்றைக்கு மாறிப் போய்த் தொலைச்சிடுச்சு)



நிகழ்வு-2

பா.ஜ.க பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி....
திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறி விட்டது,குண்டுகள் திண்டிவனத்தில் கூட வெடிக்கின்றன. அப்பாவி மீனவர்கள் உயிரிழக்கின்றனர்..அண்டை மாநில பிரச்சனையும் தீரவில்லை, உள் குடும்ப பிரச்சனையும் தீரவில்லை...


குண்டுகள் எங்கே வேண்டுமானாலும் வெடிக்கலாங்க. அதென்னங்க திண்டிவனத்தில் கூட?... அதுக்கு கலைஞர் என்ன பண்ணனும்ங்க?

அண்டை மாநிலப் பிரச்சனையும் தீரவில்லை. ஆஹா கர்நாடகத்திலே இவனுக கூட்டணிக் கட்சிதானுங்க கும்மி அடிக்கிறானுக... ஏன் காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டியது தானே?


நிகழ்வு-3

டில்லியில் எம்.பி க்கள் வசிக்கும் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து விட்டது. மலைச்சாமி எம்.பி குற்றச்சாட்டு. மத்திய சுற்றுச் சூழல்\வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

ஆஹா வனத்தில மேய்ச்சாலும் இனத்திலே சேர்-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...

நிகழ்வுகள்-4

நிகழ்வு-1
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் வரலாறு தெரியாமல் அவரது கனவு திட்டத்தை எதிர்க்கின்றனர். (சேது சமுத்திர திட்டத்திற்கு)

விஜயகாந்து சொன்னது போல 'கட்சி ஆரம்பிச்சிருந்தால் கஷ்ட நஷ்டம், கொள்கை,வரலாறு தெரியும்.இவங்க குடி வந்தவங்களுக்கு என்ன தெரியும்?
( ஆஹா.. நம்ம விஜயகாந்து உண்மையிலேயே அதிமுக-விற்குத் தான் இதனைச் சொல்லி இருக்க வேண்டும், என்ன மப்பிலயோ அன்றைக்கு மாறிப் போய்த் தொலைச்சிடுச்சு)



நிகழ்வு-2

பா.ஜ.க பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி....
திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறி விட்டது,குண்டுகள் திண்டிவனத்தில் கூட வெடிக்கின்றன. அப்பாவி மீனவர்கள் உயிரிழக்கின்றனர்..அண்டை மாநில பிரச்சனையும் தீரவில்லை, உள் குடும்ப பிரச்சனையும் தீரவில்லை...


குண்டுகள் எங்கே வேண்டுமானாலும் வெடிக்கலாங்க. அதென்னங்க திண்டிவனத்தில் கூட?... அதுக்கு கலைஞர் என்ன பண்ணனும்ங்க?

அண்டை மாநிலப் பிரச்சனையும் தீரவில்லை. ஆஹா கர்நாடகத்திலே இவனுக கூட்டணிக் கட்சிதானுங்க கும்மி அடிக்கிறானுக... ஏன் காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டியது தானே?


நிகழ்வு-3

டில்லியில் எம்.பி க்கள் வசிக்கும் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து விட்டது. மலைச்சாமி எம்.பி குற்றச்சாட்டு. மத்திய சுற்றுச் சூழல்\வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

ஆஹா வனத்தில மேய்ச்சாலும் இனத்திலே சேர்-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...

Wednesday, May 16, 2007

இவனுக ஏன் இப்படி இருக்கிறானுக???


விஜயகாந்த்

கல்யாண மண்டபத்தை இடிக்காமலிருக்க அரசியலில் குதித்த விஜயகாந்து இப்போது அதனைவிடவும் அதிகமாக தேற்றி இருப்பார்.

இலவச டிவிக்கு இலவச கேபிளைக் கேட்டவர்

தனது கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாக கல்வியை வழங்கி அனைத்து அரசியல் வாதிகளுக்கும் முன் மாதிரியாக இருக்கக் கூடாது???

ரஜினி

இந்த ஆளுக்கும் இதே கேள்விதான்???

நதி நீர் இணைப்புக்கு அறிக்கை விட்டதோடு ஆள் எஸ்கேப்பு.... தருகிறேன்னு சொன்ன தொகையைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டுக்காய் கர்நாடகத்திடம் ஏன் பேசக்கூடாது??? முதல் அடியை ஏன் எடுத்து வைக்கக்கூடாது???

கம்யூனிஸ்ட்டுகளும்,இ.காங்கிரஸூம்
நதி நீர் பிரச்சனையில் ஏன் இப்படி நடிக்கிறானுக??? இவனுக ஒட்டுக்காய் வாழும் விபச்சாரிகள்.

ஜெ

அம்மா குணம் அகில உலகுக்கும் தெரியும். எதுவும் நிரந்திரமில்லை என்று உலகுக்கு உணர்த்துபவர்

எத்தனை முறை சூடு போட்டாலும் திருந்தாத கூட்டணிக் கட்சிக் காரனுக காலில் விழுவதை எப்போ நிறுத்துவானுக??? (முக்கியமாக இராமதாஸ்,வைகோ,இ.கா,சு.சாமி)

இந்த அம்மா அடிச்ச காசை எவனெவனோ தின்னாலும் பரவாயில்லை என்று கட்டிக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு ஏழைகளுக்கு செலவழிப்பதெப்பதோ???

அதிமுக-காரனுக

இன்னைக்கும் இவனுக குழந்தைகளுக்காய் இட ஒதுக்கீட்டுக்காய் போராடும் கட்சிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க மாட்டேனுகிறானுக???

திமுக காரனுக

இன்னும் கீழ்மட்டத்திலிருக்கும் தொண்டர்களை கவனிப்பது எப்போது?
வாரிசு அரசியலை நிறுத்தி உண்மை தொண்டனுக்கு ஆதரவு அளிப்பது எப்போது?

திக காரனுக

பாப்பானை எதிர்ப்பது இருக்கட்டும் இத்தனை ஜாதி சங்கங்களை எதிர்க்காதது ஏன்???

பள்ளியில் சாதி என்ற காலத்தை காலா காலத்துக்கும் நீக்கினால் வரும் நாலாவது தலைமுறையாவது ஜாதியற்று இருக்குமல்லவா?????

கலைஞர்


தமிழகத்தின் மார்க்கண்டேய பிரச்சனைகளை பட்டியலிட்ட மூதறிஞரே தீர்வுகள் எப்போது????

குடும்பத்தை விட்டு எப்போது உங்க நிர்வாகத்திறமையைக் காட்டப் போகின்றீர்கள்???

வைகோ
நம்பிக்கை துரோகத்தை எப்போ விடுவீங்க???

இராமதாஸ்
நல்ல நல்ல நாடகங்களை நடத்தும் ஐயா என்றைக்காவது ஒரு நாள் தலித்தை முதல்வராக்க முடிவெடுத்த நீங்க

அவங்களை சம்பந்தி ஆக்க முடியுமா???

கேள்விகள் தொடரும்................

இவனுக ஏன் இப்படி இருக்கிறானுக???


விஜயகாந்த்

கல்யாண மண்டபத்தை இடிக்காமலிருக்க அரசியலில் குதித்த விஜயகாந்து இப்போது அதனைவிடவும் அதிகமாக தேற்றி இருப்பார்.

இலவச டிவிக்கு இலவச கேபிளைக் கேட்டவர்

தனது கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாக கல்வியை வழங்கி அனைத்து அரசியல் வாதிகளுக்கும் முன் மாதிரியாக இருக்கக் கூடாது???

ரஜினி

இந்த ஆளுக்கும் இதே கேள்விதான்???

நதி நீர் இணைப்புக்கு அறிக்கை விட்டதோடு ஆள் எஸ்கேப்பு.... தருகிறேன்னு சொன்ன தொகையைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டுக்காய் கர்நாடகத்திடம் ஏன் பேசக்கூடாது??? முதல் அடியை ஏன் எடுத்து வைக்கக்கூடாது???

கம்யூனிஸ்ட்டுகளும்,இ.காங்கிரஸூம்
நதி நீர் பிரச்சனையில் ஏன் இப்படி நடிக்கிறானுக??? இவனுக ஒட்டுக்காய் வாழும் விபச்சாரிகள்.

ஜெ

அம்மா குணம் அகில உலகுக்கும் தெரியும். எதுவும் நிரந்திரமில்லை என்று உலகுக்கு உணர்த்துபவர்

எத்தனை முறை சூடு போட்டாலும் திருந்தாத கூட்டணிக் கட்சிக் காரனுக காலில் விழுவதை எப்போ நிறுத்துவானுக??? (முக்கியமாக இராமதாஸ்,வைகோ,இ.கா,சு.சாமி)

இந்த அம்மா அடிச்ச காசை எவனெவனோ தின்னாலும் பரவாயில்லை என்று கட்டிக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு ஏழைகளுக்கு செலவழிப்பதெப்பதோ???

அதிமுக-காரனுக

இன்னைக்கும் இவனுக குழந்தைகளுக்காய் இட ஒதுக்கீட்டுக்காய் போராடும் கட்சிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க மாட்டேனுகிறானுக???

திமுக காரனுக

இன்னும் கீழ்மட்டத்திலிருக்கும் தொண்டர்களை கவனிப்பது எப்போது?
வாரிசு அரசியலை நிறுத்தி உண்மை தொண்டனுக்கு ஆதரவு அளிப்பது எப்போது?

திக காரனுக

பாப்பானை எதிர்ப்பது இருக்கட்டும் இத்தனை ஜாதி சங்கங்களை எதிர்க்காதது ஏன்???

பள்ளியில் சாதி என்ற காலத்தை காலா காலத்துக்கும் நீக்கினால் வரும் நாலாவது தலைமுறையாவது ஜாதியற்று இருக்குமல்லவா?????

கலைஞர்


தமிழகத்தின் மார்க்கண்டேய பிரச்சனைகளை பட்டியலிட்ட மூதறிஞரே தீர்வுகள் எப்போது????

குடும்பத்தை விட்டு எப்போது உங்க நிர்வாகத்திறமையைக் காட்டப் போகின்றீர்கள்???

வைகோ
நம்பிக்கை துரோகத்தை எப்போ விடுவீங்க???

இராமதாஸ்
நல்ல நல்ல நாடகங்களை நடத்தும் ஐயா என்றைக்காவது ஒரு நாள் தலித்தை முதல்வராக்க முடிவெடுத்த நீங்க

அவங்களை சம்பந்தி ஆக்க முடியுமா???

கேள்விகள் தொடரும்................

எங்கியோ இடி இடிக்க இங்க மழை பெய்கிறது

இடி1
நேற்று முன் தினம் சட்ட சபையில் கலைஞர் இந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதால் தான் நதி நீர் பிரச்சனையில் அமைதியாக இருந்ததாக கூறினார். இனி பொறுக்கப் போவதில்லை என்பது அவரது நிலைப்பாடு

மழை
சன் டிவி வட்டாரங்களில் பலத்த புயல் மழை இருக்கும். இதனால் ஆந்திரா,கர்நாடகா,கேரளாவிலுள்ள நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகத்தின் டவர் நிலையத்தில் வெள்ளைக் கொடி கட்டாயமாக பறக்க விடப் பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது


இடி2
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மழை
ராதிகா செல்விக்கு மந்திரி பதவி...நாடார் காட்டில் நல்ல உழவு மழை.



இடி3

வங்க தேச- சிட்டகாங்கில்

மழை
இந்திய கிரிக்கெட்டுக்கு வெற்றி மழை

எங்கியோ இடி இடிக்க இங்க மழை பெய்கிறது

இடி1
நேற்று முன் தினம் சட்ட சபையில் கலைஞர் இந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதால் தான் நதி நீர் பிரச்சனையில் அமைதியாக இருந்ததாக கூறினார். இனி பொறுக்கப் போவதில்லை என்பது அவரது நிலைப்பாடு

மழை
சன் டிவி வட்டாரங்களில் பலத்த புயல் மழை இருக்கும். இதனால் ஆந்திரா,கர்நாடகா,கேரளாவிலுள்ள நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தமிழகத்தின் டவர் நிலையத்தில் வெள்ளைக் கொடி கட்டாயமாக பறக்க விடப் பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது


இடி2
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மழை
ராதிகா செல்விக்கு மந்திரி பதவி...நாடார் காட்டில் நல்ல உழவு மழை.



இடி3

வங்க தேச- சிட்டகாங்கில்

மழை
இந்திய கிரிக்கெட்டுக்கு வெற்றி மழை

Tuesday, May 15, 2007

கலைஞரும் மூன்றும்

நேசிக்கும் தமிழின் எழுத்து மூன்று

தமிழ் மூன்று

கனி மூன்று

திருக்குறள் மூன்று பால்

வேந்தர் மூன்று

தமிழ் சங்கம் மூன்று

கலைஞர் மூன்றாவது தலைவர் (பெரியார்,அண்ணா,கலைஞர்)

மனைவிகள் மூன்று (அதிகாரப் பூர்வமாக)

கட்சி மூன்றெழுத்து

வாழ்நாள் எதிரி மூன்றெழுத்து( எம்.ஜி.ஆர்)

கொள்கை மூன்று (கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு)

வாரிசுகள் (அதிகாரப் பூர்வமாக களத்தில்) மூன்று

பிரச்சனைகள் காவிரி,முல்லைப் பெரியார்,பாலாறு.


கொண்டாடுவது முப்பெரும் விழா.

Monday, May 14, 2007

திமுக தலைமைக்கு அதிரடி அழகிரி???

தான் ஒரு சிறந்த தலைவராக வரக்கூடிய தகுதிகள் இருப்பதனை மீண்டும் நிரூபித்துள்ளார் அழகிரி.
இப்போது அவருக்கு தேவை ஒரு பாதுகாப்பு கவசம்.

அது ஒன்று மத்திய அமைச்சர் பதவி அல்லது கட்சித்தலைவர் பதவி...

ஸ்டாலினை விடவும் கட்சியை வழிநடத்த இவரே தேவை.

ஸ்டாலினுக்கு சட்ட சபையில் பேசவே தெரியவில்லை. இன்று பதவிக்காய் குளிர் காயும் கூட்டம் நாளை காணாமல் போகக் கூடும்.
கட்டாயம் திமுக தலைமைக்கு குறி வைத்து சில நரிகள் பாயக் காத்திருக்கின்றன. இதில் இப்போது மாறன்களும்.

மாறனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது.

3 உயிர் பலிகள் கொடுத்து தான் இவர்களின் சொத்து பிரச்சனை தீர வேண்டுமா?

இன்னும் விரிவான உண்மைகளுக்கு

http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_14.html நன்றி

Sunday, May 13, 2007

புது மத்திய தகவல் தொடர்பு அமைச்சர்

புதியதோர் டிவி படைப்போம்

ரத்தத்தின் ரத்தம்; அண்ணே பாத்திங்களா திமுக-காரனுகளுக்கு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி மாதிரி நம்ம டிவியையும், சன் டிவியையும் சமாளிக்கனும்...

வைகோ; இப்போ தெரியுதா டிவி இல்லாமல் கட்சி நடத்தும் கஷ்டம்..?

இதனை கேட்ட கலைஞர் ஆஹா கட்சிக்கு கோஷ்டி மாதிரி டிவியும் முக்கியம்- என நினைக்கையிலேயே ஒரு கோஷ்டி உள்ளே வருகிறது....

ராதிகா; அப்பா நான் அப்பவே சொன்னேனே.. கேட்டீங்களா?
இப்பவும் ஒண்ணும் கெடலை..கனியை கொள்கை பரப்பு செயலாளர் ச்சீ ச்சீ.. தகவல் துறை அமைச்சராக்குங்கள்.. ராடன் டிவிக்கு அனுமதி கொடுங்க....

24மணி நேரத்தில் வரும் அத்தனை மெகா சீரியல்களுக்கு இடையே உங்களின் பொன் மொழிகளை இரண்டு இரண்டு நிமிடமாய் காட்டிக் கொண்டிருப்பபோம்.

கூடவே தினகரன் மீட்பு இயக்கம்-ன்னு ஒன்னைப் போட்டு பச்சைத் தமிழன் சரத் தலைமையில் அமைப்போம்


இராமதாஸ்; நம்ம டிவிக்கு வந்திடுங்க...இந்த நாள் இனிய நாள்-ன்னு நீங்களும், வணக்கம் தமிழகத்துக்கு நானும், தொகுப்புக்கு தொல.திருமா-வையும்.,...போட்டுத் தாக்கலாம்.

வசந்த குமார்; ஐயா நம்மளை இது நாள வரை போட்டு அமுக்கி வச்சிருந்தாங்கே... இப்போ ஒளிமயமான டிவிக்கு வசந்த் அன் கோ மாதிரி... நீங்க தான் ஆதரவு அளிக்கனும்..

பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்க.. இல்ல இல்ல தமிழ் தலைவா அன்று 16 வயதினிலே-ஐ ப்போல புத்தம் புதிய தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்த ராமர் பாலத்துக்கு அணிலைப்போல உதவ ஓடோடி வந்தேன்....

பக்கத்திலிருக்கும் டி.ஆர்.பாலு தலைவா சந்தேகமே இல்லை (ராமர் பாலத்தை இழுத்தால்) இவன் அவன் தான்

பாரதி ராஜா; நான் அவன் இல்லை என்று கதற கதற அழகிரி ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறார்...

உஸ் அப்பா இப்பவே கண்ணைக கட்டுதே-- கலைஞர் கண்ணை சற்றே மூட..

ஏய் சன்னு
உன் வாயில மண்ணு.. என்றவாறே விஜய ராஜேந்தர் பிரவேசிக்க.....

அழகிரி குறுக்கிட்டு எந்த சன்? என்க...

நிமிடத்தில் அடுக்கு மொழி பறக்க...சாதா மொழியில்...

தலைவா அந்த எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்...இந்த சன்னை எதிர்க்க என்னை களமிறக்குங்கள்.. துண்டைக் காணோம் துணியக் காணோம்-ன்னு ஓட வைக்கிறேன்...

அழகிரி கோஷ்டி குசு குசுப்பாய் அழகிரியிடம் தலைவா இவன் தமிழகத்தையே அப்பிடி ஓட வச்சிருவான் அதனால... என்பதுக்கு முன்னமே அழகிரியின் கண்ணசைய....



அழகிரி;(ஸ்டாலினைப் பார்த்து)
இவனுகளை எல்லாம் வளர்த்து வுடுவதுக்கு பதில் நாமே ஒரு டிவியை ஆரம்பிப்போம். வழக்கம் போல வடக்கு உனக்கும் உன் பையனுக்கும், தெற்கு எனக்கும் என் பையனுக்கும்.


கலைஞர்; அருமை அருமை.. அனைத்து இலவச கலர் டிவிகளுக்கும் இலவச கேபிள் தம்பி விஜயகாந்த் கோரிக்கையை ஏற்று என்று அறிவிப்பை பத்திரிக்கைக்கு கொடுத்திடுங்க.

முன் மொழிகிறேன்

தலைவா..

இனியாவது முல்லைப் பெரியாருக்கும், காவிரிக்கும் தீவிர நடவடிக்கை எடுங்கள்.

அழகிரி தலைமையில் கட்சியையும், ஆட்சியை ஸ்டாலினுக்கும், வட இந்தியாவிற்கு கனிமொழியையும் முன் மொழிகிறேன்..

Saturday, May 12, 2007

தினகரனுக்கு

சரி கலைஞர் விழாவைப் பற்றி என்ன சொல்லியிருப்பங்கன்னு பார்க்கப் போனேன்.சரி கருத்துக் கணிப்பு என்ன சொல்லறாங்கன்னுட்டுப் பார்த்தால்

1.சட்டப் பேரவையில் நடக்கும் அமளிகள்

48% பொறுப்பின்மை
29% மக்கள் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு
இப்படி...

2.உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எது பிடிக்கும் பிடிக்காது தெரியுமா?80% தெரியுமாம்
15% ஒரளவு தெரியும்
இப்படி....

இதுல நாளைக்குன்னு போட்டு ஒரு டிரெயிலர் போட்டிருக்கிறான் பாருங்க

1.வயதான தாய் தந்தை வீட்டோடு இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? (ஆட்சியிலிருப்பதை குறிப்பிட்டு அல்லவல்லவா?)

2.சிறந்த கருத்தடை சாதனம் எது????????????


சரோஜா சாமன் நிக்காலோ



இதோ நம்ம கருத்துக் கணிப்புத் தலைப்பு



சன் டி.விக்கு அடுத்த தலைவர்??

சன் டிவிக்கு அடுத்த ஆபீஸ் எங்கு?

கலாநிதி மாறனின் விமானத்தில் கலைஞர் ஏறுவாரா மாட்டாரா?

தயாநிதி மாறன் கட்சித்தலைமைக்கு சிறந்தவரா?

வைகோவும் தயாநிதி மாறனும் கட்சி ஆரம்பித்தால்?

முத்தம்--கணவன் கொடுப்பது சிறந்ததா? இல்லை பக்கத்து வீட்டுக்காரர் கொடுப்பதா?

குளிக்கும் போது ஜட்டி போடலாமா?

இப்படி தொடர வாழ்த்துக்கள்...............


பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் நாடாவை அவிழ்த்து பாவாடையை கழற்றி பார்க்கின்றனர்..

இந்த வாரம் சன் வாரம்

சன்கள் தலையெடுத்து
சன்னைத் தாக்க,
சன் படம் பிடிக்க,
சன்னுக்கு சனி பிடிக்கிறது....

கலைஞர் யாருக்கு நல்லது செய்கிறாரோ அவர்கள் திருப்பித் தருவது இது மாதிரி தான்.

இன்று கலைஞரின் பெயரை வைத்து சம்பாரிச்ச நாய்கள், அவரின் ஐம்பதாண்டு சம்பாத்தியத்தை முழுங்கி விட்டனர்....

7ம் தேதி தான் நாம ஒரு படையலைப் போட்டோம்,http://sursh.blogspot.com/2007/05/blog-post.html, நாம நினைச்சோம் கலைஞர் சரியாக பாகம் பிரித்திருப்பார் என்று...

எப்படியோ ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு.... கலைஞரை இப்போ ஒய்வெடுக்க வைக்கிறானுக.

கலைஞரின் மனச்சாட்சி இப்போது இருந்திருந்தால்?????????

Friday, May 11, 2007

வளர்த்த கடா குத்த வந்தால்

அரங்கேறும் காட்சிகளை கண்டு களிக்கும் தமிழ் குடிமக்களுக்கு ஒர் வேண்டுகோள்....

அப்பாவி உயிர்களைப் பறித்து விட்டு எதுவும் உறைக்காமல் தேமே என்று இருக்கும் அனைத்து திமுக எடுபிடிகளுக்கும், சன் டிவி-யின் நிர்வாகத்துக்கும் நமது கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

சன் டிவிக்கு;

இதனை கருத்துக் கணிப்பாய் வெளியிட முடியுமா?

சன் டிவி-துவக்கப்பட்டதில் யார் பங்கு அதிகம்.
1. கருணாநிதியின் பினாமி பணத்தால் துவங்கப்பட்டது

2. மாறனின் லஞ்சப்பணம்+ கலைஞரின் லஞ்சப்பணத்தால் (50\50) துவங்கப்பட்டது.

மத்திய அமைச்சர்களில் முதல்வருக்கு தகுதியானவர்
1.தயாநிதி மாறன்
2.டாக்டர் அன்பு மணி

இப்படி இன்னும் அருமையான கருத்துக்களை கணிப்பாக்கி தமிழகத்தின் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்கலாமே....



அழகிரி; பாபா கவுண்டன் ஸ்டார்ட்....கலாநிதி மாறன் கத்தியை நீயா எடுத்தால் சமாதானம்.. இல்லை ரெடி ......


தயாநிதி மாறன்;- சமீப கால அனைத்து போட்டோக்களிலும் முகத்தில் பிளாஷ் (பல்லைக் காண்பிச்சுக்கிட்டே இருந்தால்) மின்ன நின்று தனது இருப்பை முன்னிலைப்படுத்த முனைந்தவர்.

கட்சிக்கு என்ன பண்ணிட்டார் இவர் எல்லாம்?
எதற்காய் இப்படி ஒரு கருத்துக் கணிப்பு?

அட ஸ்டாலின்-அப்படிக்கிறவர் இருக்கிறார் அவருக்கு நாம் மரியாதை பண்ண வேண்டும் என்று தோன்றாத்து ஏன்?

கலைஞர் ஸ்டாலினுக்கே மந்திரி பதவி கொடுக்க ஆயிரத்தெட்டு நாடகம் போட்டு கொடுக்கையில், இவனுக்கு மட்டும் ஏன் முதலிலேயே கொடுத்தார்?

கலைஞர் முன்பு வினை விதைத்ததை (அண்ணாவிற்குப் பிறகு கட்சியை கைப்பற்றியது) இப்போது அறுவடைக்குத் தயார்......

யார் கண்டது இது அனைத்தும் புரூப் ரீடரின் அனுமதி பெற்று நடத்தப் பட்டவையா?


எது எப்படி இருந்தாலும் கலைஞருக்கு ஒர் வேண்டு கோள்----

உங்க சாம்ராஜ்யத்துக்கு உரிய பட்டத்து இளவரசனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது நல்லது...

Thursday, May 10, 2007

நிகழ்வுகள்3

நிகழ்வு 1
தமிழகத்தில் நாய்த் தொல்லை திடீர் அதிகரிப்பு.--தினமலரின் வெப்- சைட்டில்(10-05-2007) முதல் பக்க செய்தி.

இதுக்கும் தினகரன் அலுவலகத்துக்கும் முடிச்சு போடாதீர்கள்...

நிகழ்வு-2

வங்க தேசத்தில் வாங்கும் அடியோடு இந்தியா கிரிக்கெட்டுக்கு சுபம்...

நிகழ்வு-3
திமுக-வில் வாரிசுகளுக்கு இடமில்லை. தினமலரில் கலைஞர்.

முரசொலி மாறனின் வாரிசுகளுக்கு என்று வாசிக்கவும்.

நிகழ்வுகள

சரியாக செயல்படாத எம்.எல்.ஏ-க்களை மக்களே திரும்ப அழைக்க சட்டம் வேண்டும்-- சட்ட சபையில் இ-கம்யூ(ராமசாமி)

சட்ட சபையில் பதிலே வந்திருக்காதே...........

Tuesday, May 8, 2007

நிகழ்வுகள்3

நிகழ்வு1
டி.ஆர் பாலு தான் நம்பர் ஒன்று- ராமதாஸ்

பக்கத்து இலைக்கு பாயாசம் போடுங்கப்பா......

நிகழ்வு2

ஜூ.வியில் கடந்த சில வாரங்களாக வரும் போலீசாருடன் பொதுமக்கள் சந்திப்பு-லிருந்து..மே 9-2007

இதனால் என்ன பயன்?????????

கேள்வி (அகிலன்); பாஸ்போர்ட்டுக்கு வெரிபிகேஷனுக்கு வரும் போலீசார் 250ரூபாய்க்கு குறையாமல் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்?
பதில்;- இது அகிலனுக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம்.எங்கோ ஓரிரு இடங்களில் நடைபெறுவதை வைத்து பொதுப்பபடையாக குற்றம் சுமத்தக்கூடாது.
(ஐயா 15 வருடத்துக்கு முன்பு ரூபாய்100, இன்று 250ரூபாய். இது எழுதப்படாத விதி.,இது கூட தெரியாமல் நீங்கள் எப்படி குற்றவாளிகளை பிடிக்கிறீர்கள்?)
போலீசார் லஞ்சம் கேட்டால் உயரதிகாரிக்கு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

(( ஹா ஹா.... ஒன்னு பாஸ்போர்டு வெரிபிகேஜஷன் தடை படும், அல்லது லஞ்சத் தொகை அதிகரிக்கும், இன்று அரசாங்கத்திலுள்ள அத்தனை துறைகளும் வீணாப்போனது...

Monday, May 7, 2007

திமுக-வை துவக்கிய போது கருணாநிதி இருந்தது எங்கே?

தலைவர் விஜயகாந்து அவர்களே!!!!

தங்களுக்கு வரும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு வீணான சர்ச்சையில் சிக்காதீர்கள்..

ஒருவரை தலைவராக ஏற்று இது நாள் வரை வைகோ போலவே நீங்களும் நடித்தீர்களா?

இன்றைக்கு இருக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து அரசியல் நடத்துங்கள்.

அல்லாது ஜெ-வை போல கடந்த காலத்தில் புரூப் ரீடர் இன்று அவரது சொத்துக்கு வானமே எல்லை என்று குப்பைகளை கிளறாதீர்கள்....

ஊரு உலகத்துக்கே தெரியும் அன்று ஒன்றுமில்லாதவர்கள் இன்று கோடீஸ்வரர்கள்...
கவுண்டமணி சொன்னது போல 'அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா'
அப்படித்தான் தமிழகமல்ல, இந்தியாவே விட்டு வைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆரும் இப்படித்தான் கிளம்பினார், பின்னர் பாட்லிங்கில் அடித்த காசு இருக்கே.... அப்பப்பா...
யாரும் புனிதர் கிடையாது...என்ன மாறன் வாரிசுகள் பத்திசாலித்தனமாக அரசியல் பாதுகாப்பில் சன் டிவியை நிறுவினர்.
கலைஞர் வாரிசுகளோ வீண்டித்து விட்டனர்.
கலைஞருக்கு பிறகு ஒரு சொத்து தகராறு நடக்கலாம்.
அல்லது முன்பே கலைஞர் இதனை முடித்திருக்கலாம்.


இன்று கலைஞரை கேள்வி கேட்கும் ஜெ.... கூடவே வைச்சிருக்கிற ச-சிகலாவை வசதியாக மறந்து விட்டார்.. இது தான் செலக்டிவ் அம்னீசியாவா???

கிரி படத்தில் வடிவேலு மாதிரி தான் இன்றைய அரசியல் (பேக்கரியை நீ வச்சுக்கோ, உங்க அக்காவை நான் வச்சுக்கிறேன். இது தான் டீலீங்)

Saturday, May 5, 2007

நிகழ்வுகள்2

நிகழ்வு 1
கொல்கத்தா பயிற்சியில் கேப்டன் மூக்கு உடைந்தது.

அது உடைஞ்சு நாளென்ன ஆச்சு?

நிகழ்வு2
ரசிகர்கள் தள்ளுமுள்ளால் திரிஷாவை தனி அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டினர்.

திருந்த மாட்டானுங்க........

நிகழ்வு3
புலிகள் விமானத்தால் இந்தியாவிற்கு ஆபத்து- சுப்பிரமணிய சாமி

நாம இருக்கிறதை காண்பிக்க மொக்கை போடுவது எப்படி என்பதுக்கு நமக்கெல்லாம் வழிகாட்டியவர்.

நிகழ்வு4
சென்னைப் பல்கலை கழகத்துக்கு அந்தஸ்து உயர்ந்ததுக்கு முந்தைய அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காரணம். அமைச்சர் பொன்முடி பாராட்டு...

மாப்ப்பு வைச்சிட்டாங்கய்யா ஆப்ப்ப்பு...............

நிகழ்வு5
ஊழல் வழக்குகளில் திமுக-வினர் விடுதலை ஆவது எப்படி என்று விளக்கமளிக்க அதிமுக எம்.பி-க்கள் மனு....

அம்மாகிட்ட கேட்டீங்களா?

நிகழ்வு6
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளிடம் ஆதரவு.. மூத்த விஞ்ஞானி-
தேசிய தாவர உயிரி தொழில் நுட்ப கழகத்தின்- பி.ஆனந்தகுமார்

இவருக்கும் இவருடைய சந்ததிக்கும் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பயிர்களையே உணவாக கொடுக்க வேண்டும், அமெரிக்காவின் கைக்கூலிகள்...

Friday, May 4, 2007

நிகழ்வுகள்

நிகழ்வு 1
தமிழக ராகுல்

நாகர்கோவில் அப்டா மார்கெட்டை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார். என்னன்னு கேக்கிறீங்களா?
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கமாறு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்...... ஒரு காய்கறி மார்கெட்டை பார்க்க வருமளவுக்கு
சுற்றுலாவுக்கே இடமில்லையா?...... (அதுவும் சரிதான், குற்றாலத்துக்கே துணி எடுத்துப் போய் துவைக்கிறது தானே நம்ம சுற்றுலா!!!!!!!!!)

இவர் தானுங்க நாளைய முதல்வர்....

சரி அவரை விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.....
ரிலையன்ஸ் வருகையால் வியாபாரிகள் நஷ்டம் என்று கூறும் பா.ம.க
இது மாதிரி ஒரு தனியார் அங்காடிகளை கட்சி சார்பற்று இயக்க உதவி செய்யக்கூடாது?

நிகழ்வு-2

குழந்தையை த-த்து எடுக்க பயப்பட வேண்டாம்.. கனிமொழி தைரியமூட்டி, த-த்து விளக்க கையேட்டை வெளியிட்டார்.

அது சரி... நாம தானே 35வயசைக்கூட த-த்து எடுப்போமே!!!!!!!!!

நிகழ்வு--3

விஜய காந்த் மண்டபத்தை அவரே இடிக்கிறாராம்

அப்ப பிரச்சார போஸ்டருக்கு படம் ரெடி-......

நிகழ்வு-4

விடுதலைப்புலிகள் மீது கருணாநிதிக்கு எப்போதும் பற்றும் பாசமும் இருக்கிறது என்பது போலீசு மானிய அறிக்கையில் இலங்கை தமிழர்களைப்பற்றி
அவர் கூறியள்ளதிலிருந்து தெரிகிறது என்று ஜெ... அறிக்கை..
விடுதலைப்புலிகள் விஷயத்தில் கலைஞருக்கு ஏழரை தீரவே தீராது....


நிகழ்வு-5

கல்லுரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
கடலை போட இலவச பிகர்கள் தருவார்களா (விஜயகாந்த் இலவச டிவிக்கு இலவச கேபிள் கேட்டது போல)???

நிகழ்வுகள்

நிகழ்வு 1
தமிழக ராகுல்

நாகர்கோவில் அப்டா மார்கெட்டை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார். என்னன்னு கேக்கிறீங்களா?
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கமாறு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்...... ஒரு காய்கறி மார்கெட்டை பார்க்க வருமளவுக்கு
சுற்றுலாவுக்கே இடமில்லையா?...... (அதுவும் சரிதான், குற்றாலத்துக்கே துணி எடுத்துப் போய் துவைக்கிறது தானே நம்ம சுற்றுலா!!!!!!!!!)

இவர் தானுங்க நாளைய முதல்வர்....

சரி அவரை விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.....
ரிலையன்ஸ் வருகையால் வியாபாரிகள் நஷ்டம் என்று கூறும் பா.ம.க
இது மாதிரி ஒரு தனியார் அங்காடிகளை கட்சி சார்பற்று இயக்க உதவி செய்யக்கூடாது?

நிகழ்வு-2

குழந்தையை த-த்து எடுக்க பயப்பட வேண்டாம்.. கனிமொழி தைரியமூட்டி, த-த்து விளக்க கையேட்டை வெளியிட்டார்.

அது சரி... நாம தானே 35வயசைக்கூட த-த்து எடுப்போமே!!!!!!!!!

நிகழ்வு--3

விஜய காந்த் மண்டபத்தை அவரே இடிக்கிறாராம்

அப்ப பிரச்சார போஸ்டருக்கு படம் ரெடி-......

நிகழ்வு-4

விடுதலைப்புலிகள் மீது கருணாநிதிக்கு எப்போதும் பற்றும் பாசமும் இருக்கிறது என்பது போலீசு மானிய அறிக்கையில் இலங்கை தமிழர்களைப்பற்றி
அவர் கூறியள்ளதிலிருந்து தெரிகிறது என்று ஜெ... அறிக்கை..
விடுதலைப்புலிகள் விஷயத்தில் கலைஞருக்கு ஏழரை தீரவே தீராது....


நிகழ்வு-5

கல்லுரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
கடலை போட இலவச பிகர்கள் தருவார்களா (விஜயகாந்த் இலவச டிவிக்கு இலவச கேபிள் கேட்டது போல)???

Thursday, May 3, 2007

பெரியாரும்,தமிழர்களும்

பெரியார் படத்து மூலமாகத் தான் நாம் நம்முடைய பிதாவை காண வேண்டி உள்ளது என்பது நமக்கு(தமிழ் இன உணர்வு உள்ள அனைவருக்கும்)கொஞ்சம் நெருடக்கூடியது.

நாம் ஒன்றும் தி.க.வோ,தி.மு.கவோ ஆகவோ இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை.தமிழனாக இருந்தால் போதும்.

இன்று கடைத் தமிழனும் கவுரமாக வாழ முக்கிய காரணம் காமராஜரும், தந்தை பெரியாரும் தான், காரணம்.
1980களில் இருந்து வால்பாறை எஸ்டேட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கே அப்போது ஜாதி அடக்குமுறை கிடையாது..எல்லோரும் ஔவையார் கூறியபடி இருந்தனர்.
ஆண்ஜாதி, பெண்-ஜாதி மாதிரி, லேபர்ஸ்,ஸ்டாப்ஸ் என்று இரண்டே பிரிவு.
ஒரு சமூக முன்னுதாரனமாக இருந்தது.(இன்று அனைத்து ஜாதி சங்கங்களும், மத பிரிவுகளும் வந்து கெடுத்து கொண்டிருக்கின்றன)
ஒவ்வொரு தொழிலாளிகளும் த்த்தமது பிள்ளைகளை படிக்க வைத்ததின் பயன் இன்று தெரிகின்றது.

மொத்தமாக தமிழகத்தின நிலை இதே தான். இந்த நிலைக்கு காரணம்? எந்த ஒரு மடமோ இல்லை இந்து அமைப்புகளோ இல்லை.ஒடுக்கப்பட்டவர்கள் இன்று நிமிர காரணம்?

வட இந்தியாவில் இன்று தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளுக்கு சம்மாக உள்ள ் அனைத்தும் அங்கே ஒடுக்கப்பட்டவை. அவர்கள் இன்றும் ஒடுக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கு தந்தை பெரியாரோ, காமராஜரோ இல்லாத்தன் பங்கு இன்று கண்கூடு.

நம்மை இன்று பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்....

இப்போது சொல்லுங்கள் இவர்கள் நமது நெஞ்சங்களில் இருக்க வேண்டுமா அல்லது...? இப்படிபட்டவர்களை பாக்ஸ் ஆபிஸ்க்கு கொண்டு வந்தது யார் குற்றம்?
இவர்களை நமது குழந்தைகளுக்கு சாமி படத்தை அறிமுகப்படுத்துகிறோமோ இல்லையோ அதே இடத்தில் அறிமுகப்படுத்த வேண்டுகிறோம்.
ஆனால் நாம் நிச்சயமாக செய்வோமா?

மாட்டோம் இதறகு ஒரு எடுத்துக்காட்டு... எனக்கு உறவினர் அவர் தொழில் அரசு ஆசிரியை,
பிள்ளைகளோ நகரின் தலைசிறந்த ஆங்கில பள்ளியில்.....
இது மாதிரி தான் நமக்கு சுரணை இல்லை.

தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்கு கொடுக்கும் கலைஞர்.. இதனை கட்டாயம் கவனிக்க வேண்டும்.
ஒன்று அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி...
அல்லது அனைத்து அரசு ஊழியர் பிள்ளைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும். (தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலமும் நடைமுறைப்படுத்த வேண்டும இல்லை எனறால் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கதை ஆகி விடும்,்)

கல்விக்காய் மதிய உணவு திட்டம், சத்துணவாய் மாறி, சத்து-உணவு (முட்டை)ஆக கலைஞரால் மேம்படுத்தப்பட்டதாக ஆனதோ...

அதே மாதிரி கல்வியும் மாற வேண்டும்...

அது சரி நான் சொல்ல வந்தது பாதியிலேயே நிற்கிறது..........

ஆமாங்க இதே மாதிரி (நம்முடைய அரசு ஆசிரியை போல)தான் நம்முடைய ஒற்றுமையை காட்டுவோம்.....

அட அட்லீஸ்ட் இவரு தாம்பா உனது கல்வித்தந்தை, சமூகத்தந்தை என்று காட்டி வளர்ப்போம்.....

திமுக வின் உறக்கம் நாம் ஆரம்பித்தது ராமதாஸ் தொடருகிறார்

வேறே ஒன்னுமில்லீங்கண்ணா, ஒரு ஜூவி மாதிரியோ,நக்கீரன் மாதிரியோ, நாம சொல்லிக்க வேண்டாம், என்றாலும் ஒரு மொக்கையை போடுவோம்.......

திமுக உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது..

ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, கலைஞர் உறங்கவதில்லை என்று துரை முருகன் சட்டசபையில் கூறியுள்ளார்,

உண்மை, இன்று திமுக என்றொரு கட்சி இருக்கிறது என்றால் அது கலைஞரால் தான்.. அவரை வச்சு தானய்யா நீங்க சம்பாரிக்கிறீங்க(பெயரைத்தானுங்க சொல்லுறேன்(வெளியே ஆட்டோ சத்தம் வேறு))அதை தாண்டி ஒரு வேகமான முகம்?

திமுக கட்டாயம் தனது உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய நேரமிது.....

திமுக வின் உறக்கம் நாம் ஆரம்பித்தது ராமதாஸ் தொடருகிறார்

வேறே ஒன்னுமில்லீங்கண்ணா, ஒரு ஜூவி மாதிரியோ,நக்கீரன் மாதிரியோ, நாம சொல்லிக்க வேண்டாம், என்றாலும் ஒரு மொக்கையை போடுவோம்.......

திமுக உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது..

ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, கலைஞர் உறங்கவதில்லை என்று துரை முருகன் சட்டசபையில் கூறியுள்ளார்,

உண்மை, இன்று திமுக என்றொரு கட்சி இருக்கிறது என்றால் அது கலைஞரால் தான்.. அவரை வச்சு தானய்யா நீங்க சம்பாரிக்கிறீங்க(பெயரைத்தானுங்க சொல்லுறேன்(வெளியே ஆட்டோ சத்தம் வேறு))அதை தாண்டி ஒரு வேகமான முகம்?

திமுக கட்டாயம் தனது உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய நேரமிது.....