Friday, July 17, 2009

பெங்காளி மீன் குழம்பு

பெங்காளி மீன் குழம்பு
போன கதையில் வந்த மகாத்து தான் இதிலும்,
எனது பிளாட்டானது அனைவரது மீட்டிங் பாயிண்டாக மாறியது.இரவு 11 மணி வரையிலும் அனைவரும் உட்கார்ந்து பல விஷயமாக பேசிக் கொண்டிருப்போம்.
குஜராத்தில் மது விலக்கு அமலில் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு புல் பாட்டில் என்ற கணக்கில் பாட்டில் ஒவ்வொரு மெக்கானிக்கல் காண்டிராக்டரிடமிருந்து மகாத்துக்கு வந்து விடும்.
எனது ரூமிற்க்குத் தான் வரும். இதில் கொடுமை என்னெவென்றால் நான் குடிப்பதை நிறுத்தி 10 வருடங்களானது(இன்று வரை அதே தான்).எனது ரூம் தான் ஸ்டாக் பாயின்ட் & மீட்டிங் பாயின்ட் எல்லாம்.எல்லோருக்கும் எனது சமையல் பிடித்திருந்த்தால்(அப்படி சொன்னால் தான் எல்லோரும் தண்ணி அடிக்கும் போது டிஷ் அயிட்டங்கள் வந்து சேருமல்லவா?) ஒரு கூட்டம் வந்து உட்கார்ந்திருக்கும். ஆனால் எல்லா உதவியும் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

எங்களோடு கபில் என்றொரு உ.பி காரன் இருந்தான். வீட்டில் சைவம், ஆனால் இவன் நான் வெஜ் சாப்பிட எங்களோடுதான் வந்து கலந்து கொள்வான்.

ஞாயிற்றுக் கிழமை என்பது எங்களுடைய விஷேச நாள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை எனக்கும் கபிலுக்கும் (O.T)வேலை. சமையல் புரோக்கிராம் எல்லாம் போய் விடுமே என்ற கவலை. அப்போது தான் மகாத்து தான் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம், நான் மீன் வாங்கி குழம்பு வைத்து விடுகின்றேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டான்.
கபிலும் நானும் அரை மனதோடு சரி சொன்னோம. அடுத்த நாள் நாங்கள் கிளம்பி விட்டோம்.
Site க்கு போக ரோடு வசதி அவ்வளவு சரி இல்லை.
ரோட்டிலேயே போக வேண்டுமானால் கிட்டத் தட்ட 50கி.மீ சுற்றிப் போக வேண்டும்.

குஜராத் மெரி டைம் போர்டில் அனுமதி பெற்று ஆட்கள் போக மட்டும் ஒரு பாலம் அமைத்திருந்தனர். பாவ் நகரில் இருந்து பாலம் வரைக்கும் ஜீப், பாலத்தை நடந்து கடந்த பின்பு அங்கே ஒரு ஜீப் காத்திருக்கும். அதில் ஏறி 15 கி.மீ உப்பங் கழிகளில் கடக்க வேண்டும். ஒவ்வொரு ஜீப்பிலும் வயர்லெஸ் இருக்கும்.

இதனாலே எங்களுக்கு நேரமாகி விடும். அன்றும் மதியம் ஆகி விட்டது.
ஜீப்பை நேராக மகாத்து பிளாட்டுக்கு விட்டோம். சரியான இறங்கினோம். வரவேற்பு பலமாக இருந்தது.

சாப்பாடு டேபிளில் காத்திருந்தது. சாப்பட்டை போட்டுக் கொண்டு பொறித்த மீனை எடுத்து வைத்துக் கொண்டோம். டால் பிரை மாதிரி பருப்பு இருந்தது. ‘’மீன் குழம்பை எங்கேடா என்றோம்’’?
இதோ இது தான் என்று பருப்புக்குள் கரண்டியை விட்டு எடுத்தான், உள்ளிருந்து மீன் தலை. வாந்தி வராத குறை தான் எங்களுக்கு.

விசாரித்த போது பெங்காளிகள் இப்படித் தான் பண்ணுவார்களாம்.
அன்றோடு மகாத்தினுடைய சமையலுக்கு தடா....