Friday, July 3, 2009

இலங்கை-1

பல வருடங்களாக சிந்தித்திருக்கின்றேன்,இலங்கைப் பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏன் எட்டப்படவில்லை என்று?
மக்கள்83ம் வருடங்களில் பொள்ளாச்சியில் பத்தாவது படிக்கும் பொழுது இலங்கைப் பிரச்சனைக்காய் வகுப்பை புறக்கணித்த போது, (பிரச்சனையின் தீவிரம் அப்போது தெரிந்திருக்கவில்லை) எல்லோரும் 9.30 க்குள் பேரணியை முடித்து விட்டு விருப்பப் பட்ட தியேட்டர்களில் அடைக்கலமாக,எனக்கு வீட்டுக்கு போக உபயோகப்பட்டது( நான் சினிமாவிற்குப் போகாததற்கு காரணம் அப்போது பஸ் பாஸைத் தவிர என்னிடம் 1ரூ இருக்கும்.)

அடுத்த வருடம் அகதிகள் பொள்ளாச்சி முகாமுக்கு அனுப்ப பட்டு வேர் ஹவுசில் தங்க வைக்க பட்ட போது சென்று பார்த்து ஏன் போனோமென்று நினைத்து வருத்தப் பட்டது உண்டு.(காரணம் அகதியாய் வந்த பெண்களின் பசிக் கொடுமையை பயன் படுத்தி பெண்டாண்டவர்களைப் பற்றி அப் பெண்கள் ‘’அங்கே எதுக்காய் எதை இழக்க கூடாது என்று ஓடி வந்தோமோ அதை இங்கே எங்கள் குழந்தைகளின் பசிக்காய் இதை செய்கிறோமே’’ என்று கதறியதை கேட்டதால்)
அந்த அளவுக்கு இரக்கமற்றவர்கள் தான் இப்போது இரங்குவார்களா என்று தேர்தல் நேரத்தில் நான் நினைத்தேன். அது தான் நடந்தது.

அரசியல்
ராஜீவ் காந்தி மரணத்தின் போது நாங்கள் தி.மு.க ஆண்டு (எ) நாச்சிமுத்துவுக்காய் எங்களுடைய சுய விருப்பத்தில் களப்பணியாற்றிய போது ராஜீவ் மறைவு நேர்ந்தது, அன்றைய தினங்களில் நாங்களும் மறைந்தே வாழ நேர்ந்த்து.

அ.தி.மு.க வின் திட்டமிட்ட வதந்திகளினால் இது நேர்ந்தது.

ஒரு திமுக-காரனையும் விடாமல் தாக்கினார்கள் ஆனால்.வட இந்தியாவில் ஒரு தமிழன் கூடத் தாக்கப்படவில்லை,
இதே தான் இன்றும் தொடர்கின்றது.

கடவுள் என்கின்ற சினிமா இயக்குநர், கருணாநிதியிடம் கதை சொல்லும் போது..
‘’உங்களுக்கு சூப்பர் கேரக்கடருங்கணா, எல்லோரும் அடிப்பாய்ங்க, வளைச்சு வளைச்சு அடிப்பாய்ங்க, அடிக்கும் போது ஒருத்தன் கூட இவரு ரொம்ப நல்லவருன்னு சொல்லாம அடிப்பாய்ங்க,
உங்க கண்ணுல இருந்து தண்ணியா வரும், ஆனா பார்க்கிறவன் கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கூட வராது’’ அப்படின்னு
சொல்லி அனுப்பப் பட்டவர் கலைஞர்.



தொடர்கிறேன்