Monday, July 6, 2009

மழை



இது ஒரு இன்னுமோர் ஊக்க சக்தி. இயற்கை நம்மை புதுப்பித்துக் கொள்ள கொடுக்கும் தருணம்.

உடம்பை ஒரு ஆட்டு ஆட்டி சீர் கெட்டவைகளை சரிப்படுத்த ஞாபகப்படுத்துகிறது.(ஜலதோஷம்,காயச்சல்)

முடியாதவைகளை ஒரம் கட்டுகிறது.(மனிதர்களுக்கு மரணம்)



பறவைகளைப் பாருங்கள்,மழையை மௌனமாய் வரவேற்கும்.

மனிதர்களுக்கு (நகரத்து) இது ஒரு தொல்லையாக கருதப்படுதப்படுகிறது.

எவனுக்குள் உழவனுடைய மரபணுக்கள் இன்னும் மிச்சமிருக்கிறதோ, அவன் மழையை ஆராதிப்பான்.







நான் குஜராத்தில் நிர்மா சோடா ஆஷ் கட்டுமானத்தில் 98ம் வருடம் இருந்த போது,

மழையையும், தாண்டியாவையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.



அவர்கள் நகர மக்கள் தான்,(பாவ் நகர்,குஜராத்) ஆனால் அவர்களுக்குள் அந்த மரபணுக்கள் அடர்த்தியாக இருக்கின்றது.

அதனால் தான் மழை வந்தவுடன், மொட்டை மாடிக்கோ, சாலைக்கோ வந்து ஆட்டம் போடுவதைக் காண கண் கோடி வேண்டும்..

தாண்டியாவும் அதே மாதிரி தான்.சிறியதில் இருந்து, பெரியவர் வரை அதில் காண்பிக்கும் ஈடுபாடு பிரமிக்க வைத்தது.




அதே பிரமிப்பு தான் குஜராத் கலவரத்தின் போரும் ஏற்பட்டது.
எப்படி இது சாத்தியம் என்று.
கலையை ரசிக்கும் மனதுக்குள் அவ்வளவு வக்கிரமா?
மதம் ஒரு மனிதனை எவ்வளவு பாடு படுத்துகிறது.



மழை




இன்று தவறுவதற்கு இன்று வரை என்ன காரணம் என்று பார்த்திருப்போமா?(அதுக்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை)

மரத்தை அழிப்பது மட்டும் அல்ல,

ஆக்கிரமிப்பும் கூடத்தான்.
நீர் வழித்தடங்களை எல்லாம் விற்றுக் காசாக்கி விட்டோம்.
அமெரிக்கா-காரனும், ஐரோப்பியாக்காரனும் கார்பன் கிரடிட் மூலம் பூமியை குளிரப்பண்ண நமக்கு ஆலோசனை தருவானுக, ஆனால் அவனுக நாட்டில் தான் கார்பன் உமிழ்வது அதிகம்.

இந்த மழைக்கு அன்னைக்கே பள்ளிக்கூடம் ஒதுங்கியிருந்தால்
வாழ்க்கை நல்லாயிருந்திருக்குமே என படிக்காதவனை உணரச் செய்ய தேவை ஒரு மழை.


அனைத்துக்கும் ஆதார மழையை காப்போம்.