Friday, July 10, 2009

மொட்டையாய் உணர்ந்த நாள்-4

இத்தனை களேபரத்திலும் சபரி என்ற நண்பன் ஓடிச் சென்று என்.பி வண்டியை அழைத்தே வந்து விட்டான்

பொருட்கள் அனைத்தும் தேக்கினால் செய்யப் பட்டவை.இறுதியாக டபுள் காட் தேக்கு மரக் கட்டில், தேக்கினால் செய்யப் பட்ட டிரஸ்ஸிங் டேபிள்,தேக்கு டைன்னிங் டேபிள,தேக்கு மர அலமாரி,
இவைகளை எடுப்பதாக முடிவெடுத்து,ஜெயக்குமாரிடம் இப் பொருட்களை எங்களுக்கு விற்றதாக ஒரு பேப்பரில் எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டு பொருடகளை லாரியில் ஏற்றி விட்டோம்,
‘’ராஜா லாரிக்கு உண்டான பணத்தை வாங்கு’’என்றான் பப்பி.

1700ரூ அவர்களிடமிருந்து கிட்டத் தட்ட பிடுங்கப்பட்டது.

லாரியிலேயே அனைவரும் திரும்பினோம், வழி நெடுக சாகசக் கதை பேசி.
இரவு 12.30 ஆகி விட்டது, வீட்டில் லாரி வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர். அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

ஏன்டா இப்படிப் பண்ணுனீங்க,ஒரு பத்தாயிரத்துக்கு சாமான்களை எல்லாம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய ரவுடித்தனம்??என்றது அம்மா.

‘’அம்மா பத்தாயிரம் பெரியது இல்லை,நம்மை அவன் ஏமாளி ஆக்கினதால தான் இதனைச் செய்தோம்’’ என்றான் ராஜா.

அடுத்த நாள் மாலையில் மீதமிருந்த பணம் சோம பானத்திற்கு ஒதுக்கப்பட்டது.
அதிலொருவன் டே நண்பா பத்தவே மாட்டேன்கிறது, பேசாமல் நம்ம(தங்க வேலு ஒயின்ஸ் பொள்ளாச்சியிலிருந்தது) ஒயின்ஸில் போய் 2 புஃல் எடுத்துட்டு வருவோமா என்றான்.

ஒரு மாதம் வரை எதுவும் பேசாமலிருந்தோம். பின்பு தங்கவேலுவை சந்தித்தோம்,அந்த ஆளுக்கு இன்னும் பணம் வரவில்லை என்றார்,
ராஜா, ‘’பரவாயில்லைங்க,இந்த வாரம் நாங்க பார்ப்போம், பணம் வரவில்லை என்றால்,கொண்டு வந்த சாமான்களை விற்று எங்க பணத்தை எடுத்துக்குவோம் எல்லோர் மேலேயும் ஒரு கேஸையும் போட்டு விடுவது என்று முடிவெடுத்துள்ளோம்’’ என்றான்
தங்கவேலு ‘’நான் அந்த ஆளிடம் சொல்லுகிறேனுங்க’’

அடுத்த இரண்டாவது நாள் தங்கவேலு ‘’நாளைக்கு டாக்குமென்டுகளைக் கொண்டு வாங்க, பொருட்களையும் கொடுத்து விடுங்க, பணம் நான் தான் கொடுக்கிறேன், அதனால பொருளாவது நமக்கு மிஞ்சட்டும்’’ என்றார்

அடுத்த நாள் மாலை அவர்களிடமிருந்து தகவல் வந்ததை அடுத்து கிளம்பினோம்.
பொள்ளாச்சியின் தாதா கோஷ்டியில் இருந்த நண்பனை அழைத்து பைசலை முடித்துத் தரச் சொன்னோம்.

அவர்கள் தரப்பிலிருந்து ஒரு வக்கீலும் மற்றும் சில லோக்கல் பார்ட்டிகளுமாய் பேச்சுவார்த்தை தொடங்கியது.

கடைசியாய் ரூ14,500 தருவதாக ஒப்புக் கொண்டு பணத்தைக் கொடுத்தனர், டாக்குமென்டுகளைக் கொடுத்தோம்.

தாதா நண்பனுக்கு 1000 கொடுத்தோம்.

சாமான்களை எடுக்க லாரியும் ஆட்களையும் அனுப்பினர்.
ஏற்றிவிட்ட பின்பு ஒரு இறுக்கம் குறைந்த தருணத்தில் அவர்களுடைய வக்கீல் ‘’எவ்வளவு பெரிய காரியத்தை சிம்பிளாகச் செய்திட்டீங்க, இவர் கொடுத்த டாக்குமென்டை வைத்து இவரோட தோப்பையே பறிச்சிருக்கலாம் நீங்க!!

இப்போ இது வரைக்கும் ஜெயக்குமாரிடம் ஏமாந்தது 3.5லட்சத்தை தாண்டி விட்டது,

எல்லாம் தனியே பண்ணீட்டு கடைசியிலே லோக்கல் ரவுடியை எதுக்குங்க கூப்பிட்டீங்க?’’ என்றார்.

வீட்டில் பணத்தைக் கொடுத்த போது,
நம்ம காசை மட்டும் கொடுத்து விட்டு மீதியை இத்தனை தூரம் பண்ணிய பசங்க கிட்டே கொடுத்துடு என்றனர்.

2நாள்கள் மிதந்தனர் சோம பானத்தில்...

பப்பி கேட்டான் அப்பா இனி வேற எங்காவது பணத்தை கொடுத்திருக்கிறாரா? சொல்லு வாங்கிடலாம்.

No comments:

Post a Comment