Thursday, July 9, 2009

மொட்டையாய் உணர்ந்த நாள்-2

லாரிப்பேட்டைக்கு எனது நண்பனான டோனியிடம் கதைகளைச் சொன்னேன்.இவன் அங்கு டயர்க் கடை வைத்திருந்த்தால், அனைத்து லாரி புக்கிங் ஆபீஸிலும் அனைவரையும் தெரியுமாதலால்,விரைவாக விசாரித்தோம்.

நண்பர்கள் வட்டாரத்திற்கு தகவல் அனுப்பப் பட்டு, அனைவரும் மீட்டிங் பாயின்ட்டில் உட்கார்ந்து விவாதிக்கபட்டது.கொலைக் குற்றவாளியைப் போல விசாரித்தனர்.

இதற்கிடையே,டோனி வந்து லாரி கொச்சின் போயிருக்கிறது,இங்கிருந்து லோடு ஏற்றி கோவை போயிருக்கிறது,எங்கே இறகினார்கள் என்று விசாரிக்க- இன்று மாலை டிரைவர் போன் பண்ணும் போது கேட்டுச் சொல்லிவிடுவார்கள் என்று சொன்னான்.

அனைவரும் மாலை வரை காத்திருப்பதாக சொல்லி உணவு இடைவேளைக்காய் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு பேர் அவன் போன் பண்ணும் எஸ்.டி.டீ பூத்துக்கு போய் எந்த எந்த நம்பருக்கு போன் பண்ணினான் என்று விசாரித்தானர். போன் நம்பர்களைத் தந்து கூடவே ஒரு தகவலும் தந்தான் எஸ்.டி.டீ பூத்துக்காரன்
அவன் போன் பண்ணும் நம்பரில் போன் வைக்கப் பட்டு விட்ட பின்பும் போனை வைத்து பேசிக்கொண்டே இருப்பானாம்(ஆஹா இப்படித் தானா கதை விட்டுக் கொண்டிருந்திருக்கின்றானா என்று நினைத்துக் கொண்டோம்) 100 ரூ-க்கு குறையாமல் பில் வரும் போது என்னத்தைச் சொல்ல என்று நினைத்து விட்டு விட்டானாம்.


டோனி வந்து லாரிக்காரன் இறக்கிய இடத்தைச் சொன்னதாக கூறினான்.அப்பொழுதே இரண்டு பேர் கூட நானும் கிளம்பி கோவை இராமநாதபுரத்துக்கு வந்தோம்.நான் தொலைவில் நின்று கொள்ளவும் மற்ற இருவர் சென்று பழைய வீட்டில் இருந்தவர்களைப் பற்றிய விவரத்தை கேட்க செல்வது போல சென்றனர்.(என்னைத் தவிர வேறு யாரும் அவனையோ,அவன் மனைவியையோ பார்த்ததில்லை)

அவர்களுக்கு அடையாளமாக அவன் வீட்டில் வரவேற்பறையில் பிரம்பு நாற்காலி,மற்றும் டீப்பாய் போட்டிருக்கும் விஷயத்தை கூறி அனுப்பினேன்.

அதே மாதிரி சென்று விசாரித்த போது, அதே அடையாளத்தில் பிரம்பு நாற்காலி,மற்றும் டீப்பாய் போட்டிருந்ததையும்,அந்த பொம்பளையையும் பார்த்திருக்கின்றனர்.
முன் பக்க அறை கிரில் அடித்திருந்ததால் உள்ளே நின்று கொண்டே அந்த அம்மா இவர்களிடம் நாங்க நேற்றுத்தான் இங்க வந்தோம்,அதனால் முன்னாடி இருந்தவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றாளாம்.

உறுதியானது. இரவு பொள்ளாச்சி திரும்பினோம். அடுத்த நாளை ஆபரேஷன் நாளாக மாற்ற முடிவு எடுக்கப் பட்டது.

தொடரும்.....

No comments:

Post a Comment