பலமொழி பேசுபவர்களோடு கலந்து வேலை செய்த அனுபவத்தை உங்களில் பலர் அனுபவித்து இருப்பீர்கள்.
சில சமயம் ஆரோக்கியமான கலந்துரையாடல் இருக்கும்,சமயங்களில் வெட்டுக் குத்துக்கும் (அடி தடி தான்) கொண்டு போய் விடக் கூடியதாகவும் இருக்கும்.
நான் பாவ் நகரில் நிர்மா சோடா ஆஷ் (Nirma Soda Ash) புராஜெட்டில் ஃ வேலை செய்த போது அவ்வாறு தான்.
எல்லா மாநிலமும் அங்கே இருந்த்து.
இந்த புராஜெக்டில் ஆரம்பித்த உடனே பணி மாற்றம் செய்து அனுப்பப் பட்ட 5பேரில் நானும் ஒருவன்.
நாங்கள் கன்சல்ட்டன்ட் (ஹம்ரீஷ் அன்டு கிளாஸ்கோ கன்சல்டன்டுNow JH&G ) பக்கம் என்பதால், எங்களுடைய வேலை குவாலிட்டி செக்கிங் மட்டும் தான்.
எனக்கு அடுத்ததாக ஒரு குஜராத்தி குப்தா வந்தான். அவன் படித்ததெல்லாம் பாண்டிச்சேரி என்பதால் ஈசியாய் ஒட்டிக் கொண்டோம்.. அவங்க பிளாட் அடுத்த கட்டிடத்தில், பேமிலியோடு இருந்தான்.இரண்டு நாளைக்கு ஒரு தடவை இட்லி செய்வார்கள், ஆனால் குஜராத்தி சாம்பார் தான் வைப்பார்கள், நான் தமிழ் நாட்டு சாம்பார் வைத்து கொண்டு போய் கொடுத்தேன் அதன் பின்பு இட்லி அவர்கள் சாம்பார் நான் என முறை வைத்து சாப்பிடுவோம்.
மெக்கானிக்கல் வேலையின் ஆரம்பத்தின் போது வந்தான் எனக்கு முன்னமே பரிச்சயமான மகாத்து என்பவன்.(முன்பு நான் டிரையா பைன்(Tria Fine Chem Ltd) என்ற கம்பெனியில் கம்பெனி இன்ஜினியராக இருந்த போது அவன் கன்சல்டன்டாக இருந்தான், அவன் சொல்லித் தான் நான் இந்தக் கம்பெனிக்கு வந்தேன்)
இவன் வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன்.ஸ்பெஷல் புராஜெக்டுக்கு எல்லாம் அனுப்பப் பட்டு கம்பெனியிலிருக்கும் அனைவரோடும் பரிச்சயமானவன்.இவனும் நானும் தான் பேச்சிலர். சமையல் நாங்களிருவரும் சேர்ந்தே பண்ணுவோம் என்று முடிவெடுத்தோம்.(அவனுகளுக்கும் அரிசி சாதம் நமக்கும் அதே தானே)
குப்தாவோடும் இவன் இருந்திருக்கின்றான் வேறோர் புராஜெக்டில். அதனால் அவர்களைப் பற்றி ஒரு முறை சொன்னான்
அந்த புராஜெக்டில் இருந்த போது, ஓர் பீகாரி இன்ஜினியர் அப்போது தான் புதிதாய் கல்யாணமாய் வந்திருக்கின்றான். குப்தாவுக்கு பக்கத்து பிளாட்டில் தான் குடி.
பொண்ணு நல்ல கலரு, அவன் எகிடு தகிடாய் இருப்பானாம் அப்போது ஒரு தடவை மிஸஸ்.குப்தா எப்படி இவனைக் கல்யாணம் பண்ண சம்மதித்தாய் என்றிருக்கிறாள்.
அன்று இரவே அது பாஸ் ஆகி,மறுநாள் ஆபீஸில் வெடித்தது.இனி மேல் நடக்கக் கூடாது என குப்தாவிடம் எச்சரிக்கப்பட்டது. சில வாரங்கள் கழிந்தன.
ஒரு நாள் குடும்பச் செலவுகள் பற்றிப் பேசிக் கொண்டனராம் அப்போது மிஸஸ் குப்தா சொல்லியிருக்கிறாள், குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட மாதத்திற்கு 300ரூ காண்டத்துக்கு மட்டும் செலவு பண்ணுகிறோம்,என்றாளாம்.
அடுத்த நாள் ஆபீஸில் குசு குசுக்கப் பட்டது.
மகாத்து குப்தாவைக் கூப்பிட்டு.. 10ரூக்கு 3 ன்னா 30நாளைக்கு(அந்த நாளையெல்லாம் சேர்த்து) 100ரூ போதுமே!!!அதென்ன வித்தைடா சாமி ஒரு நாளைக்கு 3 தடவை என்பது என்றானாம்.
அடுத்த நாளிலிருந்து மிஸஸ் குப்தா யாரிடமும் வாய் திறக்கவே இல்லையாம்.
bagus sekali infonya....
ReplyDeletesenang berkunjung